Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலவீனமடைந்துவரும் தமிழர் எதிர்ப்புகள்! (கட்டுரை)

பலவீனமடைந்துவரும் தமிழர் எதிர்ப்புகள்! (கட்டுரை)

2 years ago
in சிறப்பு கட்டுரைகள்

விகாரைகளை நிறுவும் வேலைத்திட்டத்தை சிங்கள ஆளும் வர்க்கம் கைவிடவில்லை. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதனை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தமிழரின் எதிர்ப்புகளால் அதனைத் தடுக்கவும் முடியவில்லை. தமிழரின் எதிர்ப்பும்கூட மிகவும் பலவீனமான எதிர்ப்புத்தான். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் என் போரால் தேர்தல் அரசியலை தாண்டி வரமுடியாமையே இதற்கான காரணமாகும்.

குறிப்பாக, இவ்வாறான எதிர்ப்புகளில் முன்னணியில் நிற்பதாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணியினர்) மக்களை அணிதிரட்டி நன்கு திட்டமிடப்பட்டவகையில் இவற்றை முன்னெடுக்கவில்லை. இதேவேளை, ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் முன்னணி தயாராக இல்லை. இவ்வாறான மனோநிலையானது மறுபுறம் தமிழரின் எதிர்ப்பை எப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேணிக்கொள்வதற்கே பயன்படுகின்றது. இது தொடர்பில் முன்னணி கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற சிலர் கூடிக்கலையும் எதிர்ப்பால் – விகாரை அரசியலை ஒருபோதுமே எதிர்கொள்ள முடியாது. முன்னணியினரின் எதிர்ப்புகளால் இதுவரையில் விகாரைகளின் நீட்சியை தடுக்க முடியவில்லை. அவ்வாறாயின், அவர்களின் எதிர்ப்பு பயனற்றது என்பதே பொருளாகும். அவர்கள் கடைப்பிடித்து வருகின்ற அணுகு முறை தவறானது என்பதையே, இதுவரையான அணுகுமுறைகளின் தோல்வி எடுத்துரைக்கின்றது. வடக்கு – கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பின்னர் விகாரைகளை நிறுவுவதை ஒரு பின் – யுத்த விரிவாக்கல் கொள்கையாகவே சிங்கள ஆட்சியாளர்கள் கைக்கொண்டு வருகின்றனர். விகாரைகளின் மூலமான பௌத்த மயமாக்கல் மட்டும் கட்சி பேதங்களை மீறி அனைவருக்குமான கட்சிக் – கொள்கையாகத் தொடர்கின்றது. இதனை எதிர்கொள்வதற்கு வழக்கமான தமிழ்க் கட்சி அரசியல் அணுகுமுறைகளால் பெரிதாக எதனையும் செய்துவிட முடியா தென்பதுதான் இதுவரையான பட்டறிவு.

யுத்தத்துக்குப் பின்னரான கடந்த 14 வருடங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் என்போரின்எதிர்ப்பு, புலம்பெயர் அமைப்புக்களின் முறைப்பாடுகள், அமெரிக்க -இந்திய தூதரகங்களின் கரிசனை – இவற்றையும் தாண்டி விடயங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அவ்வாறாயின் இவற்றை தடுப்பதற்கு என்னதான் வழி – அல்லது தடுக்கவே முடியாதா? ஒருவேளை சமஷ்டி தீர்வை தமிழர்கள் கோரும் வரையில் அவர்கள் தங்களின் விகாரைகளின் விரிவாக்கத்தையும் நிறுத்தப் போவதில்லையா? அல்லது சில வருடங்களுக்குப் பின்னர் இப்போதிருக்கும் தமிழர்களின் தொகையும் வீழ்ச்சியடைந்துவிடும். அவ்வாறானதொரு சூழலிலில் தமிழரின் எதிர்ப்புகள் வெறுமனே யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் மட்டுமே சுருங்கிப்போய்விடும் – எனவே, அதுவரையில் விகாரைகளை விரிவாக்கிக் கொண்டே செல்வோமென்று எண்ணுகின்றனரா? இது தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், தடுப்பதற்கான பதில் மட்டும் சிக்காலனதொரு கேள்வியாகவே தொடர்கின்றது. இது தொடர்பில் முன்னரும் இலங்கையின் முக்கிய பத்திரிக்கை ஒன்று பரிந்துரையை முன்வைத்திருந்தது. மேற்குலக, இந்திய இராஜதந்திரிகளை வடக்குக்கு அழைத்து கலந்துரையாட வேண்டும். ஏன் இது தொடர்பில் கட்சிகளால் சிந்திக்க முடியவில்லை. ஏன் இதனை முன்னெடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு கட்சிகள் பலவீனமாக இருக்கின்றனவா? தமிழர்களை நோக்கி இராஜதந்திர சமூகத்தை திருப்புவதற்கு இது வரையில் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் கட்சிகள் ஏன் மேற்கொள்ளவில்லை.

தொடர்புடையசெய்திகள்

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?
சிறப்பு கட்டுரைகள்

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?

March 10, 2025
1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்
சிறப்பு கட்டுரைகள்

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

February 6, 2025
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!
சிறப்பு கட்டுரைகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!

January 21, 2025
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சிந்திக்குமா?
அரசியல்

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சிந்திக்குமா?

November 25, 2024
தமிழரசு கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலையில் நேர்மையாக நடந்து கொள்வார்களா?
அரசியல்

தமிழரசு கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலையில் நேர்மையாக நடந்து கொள்வார்களா?

November 23, 2024
தமிழ் தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளுகின்றவர்கள் இனிமேலாவது திருந்துவார்களா?
அரசியல்

தமிழ் தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளுகின்றவர்கள் இனிமேலாவது திருந்துவார்களா?

November 23, 2024
Next Post
இனப்பிரச்சனை விடயத்தில் வடகிழக்கை பிரித்து கையாள முயற்சிக்கின்றார் ஜனாதிபதி; இரா.துரைரெட்ணம் குற்றச்சாட்டு!

இனப்பிரச்சனை விடயத்தில் வடகிழக்கை பிரித்து கையாள முயற்சிக்கின்றார் ஜனாதிபதி; இரா.துரைரெட்ணம் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.