உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று (21) நாடெங்கிலும் உணர்ச்சி பூர்வமாக இடம்பெற்றது.
அதன் அடிப்படையில் ஐந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 6.30 மணியளவில் கல்லடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இவ் அனுஷ்டிப்பு நிகழ்வு ஆரம்பமானது.

மட்டக்களப்பு இக்னேஷியஸ் தேவாலயத்தின் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன், உறவுகளை இழந்தவர்களின் சார்பில் அரசரெட்ணம் பேல், வதணி மோசஸ், மட்டுவாழ் இளைஞர்களின் சார்பில், தவராசா ஜெபியநாத் , ஆகியோர் ஒளி ஏற்றியதுடன், மற்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சிலுவைமுத்து அனோஜன் மற்றும் மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









