Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்திக் கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று (22) 31 பேர் கொண்ட குழு இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் சென்றடைந்தனர்.

அங்கிருந்து இன்று (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கினர். அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் கடற்றொழில் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூற்று ஆய்வுக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

இந்த நிலையில் கோபால் ராவ் உயிரிழந்தமை தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
Next Post
போதைப்பொருளுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது!

போதைப்பொருளுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.