உடல் ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி தனது எக்ஸ் (X ) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சகல பகுதிகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நேற்று (29) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே, ஒவ்வொரு குழந்தையின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புக்கு இணங்க, இலங்கையில் எந்தவொரு குழந்தையும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும்.








