Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொலைபேசியினூடாக பிறரை தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை!

தொலைபேசியினூடாக பிறரை தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை!

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவினால் சபையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தின்படி, தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர், அல்லது செய்திகளை அனுப்புபவர், பிற சந்தாதாரர்களின் தொலைபேசி இலக்கங்களை நியாயமான காரணமின்றி வெளியிடுபவர்கள், எந்தவொருவருக்கும் சிரமம் அல்லது தேவையில்லாத கவலையை ஏற்படுத்துவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களை மேற்கொள்பவரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வேண்டுமென்றே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்திகளை அனுப்பும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றம் செய்தவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும்,தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கினால், அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்பு கருவிகள் நீதிவானின் உத்தரவு மூலம் அரசுடமையாக்கப்படும்.

மேலும், இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும், முன்மொழியப்பட்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும்.

இதற்காக இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் பயன்படுத்தப்படவுள்ளனர்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மாணவி உயிரிழந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர்; நாமல் குற்றச்சாட்டு
செய்திகள்

மாணவி உயிரிழந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர்; நாமல் குற்றச்சாட்டு

May 8, 2025
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்!
உலக செய்திகள்

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்!

May 8, 2025
தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு
செய்திகள்

தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

May 8, 2025
நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா
செய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

May 8, 2025
கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி
செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி

May 8, 2025
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; சுனில் வட்டகல
செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; சுனில் வட்டகல

May 8, 2025
Next Post
பல்கலை மாணவிகள் குளிப்பதை காணொளி எடுத்த இளைஞன்; நையப்புடைத்த பிரதேசவாசிகள்!

பல்கலை மாணவிகள் குளிப்பதை காணொளி எடுத்த இளைஞன்; நையப்புடைத்த பிரதேசவாசிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.