நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, QR முறைமையை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
எதிர்காலத்திலும் நாட்டில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, தற்போதைய எரிபொருள் விநியோக முறைமையில் மாற்றம் ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், மறுஅறிவித்தல் வெளியாகும் வரை தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டு வரம்புகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.







