Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சைக்கு படிக்காமல் தொலைபேசியில் நேரம் செலவழித்த மகள்; அடித்துக் கொலை செய்த தாய்!

பரீட்சைக்கு படிக்காமல் தொலைபேசியில் நேரம் செலவழித்த மகள்; அடித்துக் கொலை செய்த தாய்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பரீட்சைக்கு படிக்காமல் தொலைபேசியில் நேரம் செலவழித்த மகளை , தடியால் தாக்கி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சீதா தேவி. இவரது மகள் நிகிதா(22). இவர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனால் தேர்வுக்காக அவர் படித்து வந்துள்ளார்.

ஆனால், படிப்பதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் நிகிதா அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், நிகிதா செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.

இதனால் அவரது செல்போனை சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துக் கொண்டனர். இனிமேல் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்த மாட்டேன் என்று நிகிதா உறுதியளித்த காரணத்தால், அவரிடம் மீண்டும் செல்போனை அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். தன்னிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டதற்கு தனது தாய் சீதா தேவி தான் காரணம் என்று அவருடன் நிகிதா சண்டை போட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் நிகிதாவின் தந்தை, சகோதரி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் நிகிதாவுக்கும், சீதா தேவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதா, அவரது தாய் சீதா தேவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது நிகிதா கையில் இருந்த தடியைப் பறித்து சீதா தேவி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிகிதாவின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு சீதா தேவி, செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சீதா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

தொடர்புடையசெய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்
செய்திகள்

நெல்லின் விலையை அதிகரிக்காமல் விளைச்சலில் அளவை அதிகரிக்க அரசு திட்டம்

August 12, 2026
கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!
செய்திகள்

கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; இலங்கை இரங்கல்!

August 12, 2026
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

August 12, 2026
செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
Next Post
எல்.பி.எல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டது தம்புள்ளை தண்டர்ஸ் அணி!

எல்.பி.எல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்டது தம்புள்ளை தண்டர்ஸ் அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.