Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்ட கணிகளுக்குள் நுழைய தடை விதிக்கும் இராணுவம்!

ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்ட கணிகளுக்குள் நுழைய தடை விதிக்கும் இராணுவம்!

2 years ago
in செய்திகள்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது.

நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்ற போதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை.

இராணுவ முட்கம்பி வேலிகளும் அகற்றப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக 5 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடயத்தை நிலங்களின் உரிமையாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குப் பாதை திறக்கப்பட்ட போதும் முட்கம்பி வேலிகள் அகற்றப்படாமலேயே காணப்பட்டன.

முட்கம்பிகள் அகற்றப்படாதமை ஏதேனும் காரணத்தைக் கூறி விடுவிப்புச் செய்ததாகக் கூறப்படும் நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி நிலங்களில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் நில உரிமையாளர்கள் பயணிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!
செய்திகள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

August 12, 2026
CID விசாரணைக்கு பின்னர் யோஷித ராஜபக்ஷ வெளியேறினார்!
செய்திகள்

CID விசாரணைக்கு பின்னர் யோஷித ராஜபக்ஷ வெளியேறினார்!

August 12, 2026
யாழ் மாநகர சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உறுப்பினர்கள் போராட்டம்
செய்திகள்

யாழ் மாநகர சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உறுப்பினர்கள் போராட்டம்

August 12, 2026
யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

August 12, 2026
கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
Next Post
காணாமல் போன சிறுவன் பிக்குவாக துறவறம்!

காணாமல் போன சிறுவன் பிக்குவாக துறவறம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.