Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தொற்றா நோய்களால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தொற்றா நோய்களால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 years ago
in செய்திகள்

நாட்டில் வருடாந்தம் 89 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதான காரணம் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தொற்றா நோய் காரணமான நாளாந்தம் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் பத்துப் பேரில் நால்வர் அல்லது ஐவர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கண்டி ரிகில்லகஸ்கட ஆரம்ப வைத்தியசாலைக்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதார சேவைக்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி திட்டத்துக்கமைய சுமார் 70 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட உள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் 14 பில்லியன் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொற்றா நோய் காரணமாக நாளாந்தம் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் பத்துப் பேரில் நால்வர் அல்லது ஐவர் உயிரிழக்கின்றனர்.

ஆகையால் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக இதய இடையீட்டு ஆய்வகத்தை நிறுவ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் புதிய நோயாளர்கள் இனம்கானப்படுவதுடன் 4000 உயிரிழப்புகளும் சம்பவிக்கின்றன. அத்தோடு ஆண்டுதோரும் விபத்துக்கள் காரணமாக 6 ஆயிரம் மரணங்கள், மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.

நாட்டில் 89 விதமான மரணங்கள் தொற்றா நோய் காரணமாக ஏற்படுகின்றன. உலகளவில் வருடாந்தம் தொற்றா நோய் காரணமாக 41 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுகின்றன.

அவர்களுள் 17.2 வீதமானோர் இதய நோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆகையால் இவை தொடர்பில் ஆரம்ப சுகாதார சேவை மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச
செய்திகள்

புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வர கதவு திறக்கப்பட்டுள்ளது; விமல் வீரவன்ச

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

July 5, 2026
பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்
செய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

July 5, 2026
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

July 5, 2026
சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்
செய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

July 5, 2026
Next Post
பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம்!

பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.