Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் உள்ள பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியானது சர்வதேச சிவப்பு மற்றும் நீல அறிவிப்புகள்!

நாட்டில் உள்ள பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியானது சர்வதேச சிவப்பு மற்றும் நீல அறிவிப்புகள்!

1 year ago
in செய்திகள்

நாடளாவிய ரீதியில் இயங்கும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட 354 உதவியாளர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 30 விசேட பொலிஸ் குழுக்களுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வுக் குழுக்களால் அடையாளம் காணப்பட்ட இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் 1604 பேரில் 361 பேர் தற்போது சிறையில் உள்ளதாகவும், 153 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த 96 பாதாள உலகக் கும்பல்களில் 101 பேர் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களாலும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுகளாலும் உயிரிழந்துள்ளனர்.

புலனாய்வு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட 1604 செயலில் உள்ள உறுப்பினர்களில், யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் குழுக்கள் 565 பேரை கைது செய்துள்ளது.

இருப்பினும், எஞ்சியுள்ள 354 பேரை கைது செய்வதற்காக பாதாள உலகத்தை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 30 விசேட பொலிஸ் குழுக்களுக்கு எதிர்கால திட்டங்களை வழங்க பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பாதாள உலக செயற்பாட்டாளர்களின் பட்டியலுக்கு மேலதிகமாக, யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் குழுக்கள் இந்த காலப்பகுதியில் மேலும் 114 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த காலத்தில் 638 பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு தழுவிய ரீதியில் பாதாள உலகக் குழுவின் கீழ் இயங்கும் 53 சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்களுக்கு சர்வதேச சிவப்பு மற்றும் நீல அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கணேமுல்ல சஞ்சீவ, துனகஹா சுஜீ, ஒஸ்மான், ஹீனட்யான மகேஷ், லலித் பிந்து, ஒலு மாரா, கொஸ்கொட தாரக, ஹரக் கட்டா, மதுஷ், பெரோஸ், ஹீனட்யான சங்கா, வல்லே சாரங்கா, பரேல் சங்கா, டி. மஞ்சு, கெஹெல்பத்தர பத்மசிறி, பொடி சாகர, கோட்டா காமினி, ஷ்யாம் சந்தருவான், ரிஸ்வான், மாமஸ்மி, வபோத கயா, கம்பஹா பாஸ் போடா, தெமட்டகொட சமிந்த, குடு ரொஷான், மொஹமட் ஷரிப்தீன், அயூப் கான், கஞ்சிபானி இம்ரான், பழனி, கிருலபனா, கிருலபனா, வபோட கயா , கெசல்வத்தே தினுகா, மோதர நிபுனா, தனேஷ், அப்துல்லா, புகுடிக்கண்ணா, ஆமி சம்பத், ஒல்காட், வல்லே சுரங்கா, சொட்டி உபாலி, சுட்டாங், பம்மா, சூட்டி உக்குங், கெசல்வத்தே தனுக, வனத்தே ஜூட். கிம்புலால குணா, பொரல ஹெகே தனுஷ்க, அங்கொட லொக்க, சுட்டே, ரத்தனபிட்டிய லோகு, வெலே சுதா, சுத்தா, குடு லால், ஹந்தயா, ரோனா, குடு நுவன், லலித் கன்னங்கர, மன்னா ரமேஷ், உரு ஜுவா, சமயங், இந்திரா, குடு அஞ்சு, மர்வின் ஜானக, மட்டு கவாரியா, குடு சலிந்து, பயாகல சனத், மத்துகம ஷான், கரந்தெனிய சுத்தா, மனோஜ் மென்டிஸ், முதித பராக்கிரம, அட்டா இந்திக, நந்துன், பொடி லஸ்ஸி, உரகஸ்மன்ஹந்திய இந்திக்க, கீகன கமகே அமரசிறி, படிகம உக்குவா, லண்டேசிவட்டே பாலாய, பாடிகம உக்குவா, லாண்டேசிவட்டே பாலய, , அமி அமிலா, அம்பா சுஜீ, பள்ளிக்குடாவே உக்குவா, கரு லொக்கா, அதுபலான பிந்து, அதுல ஒக்ஸ்போர்ட், ரசிக பிரபாத், ஹகுருவேல புருக் பத்மே, நேவி ருவான் ஆகியோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலின் தலைவர்கள் பலர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில் இவர்களின் குழுக்கள் நாடு முழுவதும் செயற்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

June 16, 2025
கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
செய்திகள்

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

June 16, 2025
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
அரசியல்

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 16, 2025
Next Post
யாழில் வைத்தியரின் தற்கொலைக்கு காரணம் என்ன?

யாழில் வைத்தியரின் தற்கொலைக்கு காரணம் என்ன?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.