Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்; மட்டு.ஊடக அமையம் கோரிக்கை!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்; மட்டு.ஊடக அமையம் கோரிக்கை!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

யாழில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன், தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நேற்று (13) மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம்,அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நேற்று(13) அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

“திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

கோழைத்தனமாக ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவேண்டும்.

வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது கடமையினை முன்னெடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகளை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தங்களது அடாவடித்தனங்களையும் அச்சுறுத்தலையும் ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கும் நிலைமையினை தடுக்கும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் ஓரளவாவது சுதந்திரமாக தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்.

கடந்த காலத்தில் வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை முன்னெடுக்கமுடியாத வகையிலான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.எனவே இவ்வாறான நிலைமைகள் இல்லாது செய்யப்பட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்
செய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்

June 16, 2025
எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
செய்திகள்

எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

June 16, 2025
காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
Next Post
ரி20 தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது!

ரி20 தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.