Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி பொது வேட்பாளரை ஒன்றிணைந்து ஆதரித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி பொது வேட்பாளரை ஒன்றிணைந்து ஆதரித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்; கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வு செய்யமுடியும்.

யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்கு 51 வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும் போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
செய்திகள்

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

August 16, 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!
செய்திகள்

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

August 16, 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை
செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

August 15, 2026
Next Post
யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.