Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக விலங்குகளை கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக விலங்குகளை கடத்தியவர்கள் கைது!

11 months ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடல் வழியாக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் ஐவர் தென்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை மீன்பிடி படகினை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 13 மலைப்பாம்புகள், உடும்பு ஒன்று, ஆமை ஒன்று மற்றும் மூன்று கிளிகள் என்பன மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த குறித்த மீன்பிடி இழுவை படகில் பயணித்த ஐவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் எடுத்து வந்த ஊர்வன மற்றும் பறவைகள் என்பனவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர் சந்தேக நபர்கள் பயணித்த இழுவை மீன்பிடி படகினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக இழுவை மீன்பிடி படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்காக இவ்வாறு கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடி படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்

June 8, 2025
கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?
செய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
Next Post
கனடாவில் ஏழு பேர் கைது; காவல்துறையினர் வெளியிட்ட தகவல்!

கனடாவில் ஏழு பேர் கைது; காவல்துறையினர் வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.