யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் பெண் ஒருவர் தனது மருமகளினால் தாக்கப்படும் காணொளி பலரதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அந்தவகையில், தடியால் குறித்த பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் காவல்துறையினர், தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைகளுக்கு பின்னர் குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.