Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேரரின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி!

தேரரின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி!

2 years ago
in செய்திகள்

தொலைபேசி நிறுவனமொன்றின் பணியாளர்கள் என கூறி பதுளையில் உள்ள விகாரைக்கு வந்த இரு இளைஞர்கள் குறித்த விகாரையின் தேரரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம்கார்டை திருடி தேரரின் வங்கி கணக்கில் இருந்து ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது ,

வங்கியில் இருந்து என கூறி தேரருக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அதில் , கணக்கு தொடர்பான உயர்த்தப்பட்ட VAT கட்டணத்தை குறைக்க அரசு உத்தரவு பெற்றுள்ளதால், வங்கி கணக்கு விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளனர் . அப்போது தேரர் தனது அனைத்து வங்கி விவரங்களையும் வழங்கியுள்ளார் .

சில நாட்கள் கழித்து விகாரைக்கு வந்த இனந்தெரியாத இரு இளைஞர்கள் கைத்தொலைபேசியில் ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டுள்ளனர். அப்போது தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் வித்தியாசமான சத்தம் கேட்பதால் அதை இளைஞர்களிடம் கூறி தொலைபேசியை கொடுத்துள்ளார் .

அதற்கமைய தொலைபேசியை சரி செய்து கொண்டிருந்த சந்தேக நபர்கள், எங்கள் நிறுவனத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் என கூறி தொலைபேசியை பெற்றுள்ளதுடன் பின்னர் தேரரிடம் அதை மீள் கொடுத்து விட்டு மிக்க நன்றி என்று கூறி விகாரையை விட்டு வெளியேறி சென்றுள்ளனர் .

சிறிது நேரம் கழித்து குறித்த தேரர் அழைப்பொன்றை எடுக்க முயன்றபோது, ​​தொலைபேசி வேலை செய்யாததால் சோதனையிட்டு பார்த்த போது , சிம் கார்டு இல்லாதது தெரியவந்தது.

சிம் கார்டுகள் சில மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் சந்தேகம் அடைந்த தேரர் தனது வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் . அப்போது அவரது கணக்கில் இருந்த ஆறரை லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து இது தொடர்பில் குறித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் தொலைபேசி மற்றும் திருடப்பட்ட சிம் கார்டு ஊடாக பெறப்பட்ட வங்கி விபரங்களை பயன்படுத்தி இந்த பணம் எடுத்திருக்கலாம் எனவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் , குறித்த தேரர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் சத்திரசிகிச்சைக்காக இந்தப் பணத்தை சேமித்ததாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
Next Post
சென்னையிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்த முயன்றவர்கள் கைது!

சென்னையிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்த முயன்றவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.