Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை மாவட்ட அங்கலாய்ப்புடன் மக்கள்; காணி பிரச்சனைக்கு ஜனாதிபதி தீர்வு தருவாரா?

திருகோணமலை மாவட்ட அங்கலாய்ப்புடன் மக்கள்; காணி பிரச்சனைக்கு ஜனாதிபதி தீர்வு தருவாரா?

2 years ago
in செய்திகள்

திருமலை மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள 41361 ஏக்கர் மக்களுடைய காணியை விடுவிக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகின்றது.

மூதூர், குச்சவெளி பகுதிகளில் உள்ள மலை வளம் சட்டத்திற்கு முரணான வகையிலும், அரச அதிகாரிகளின் அனுசரணையிலும் உடைக்கப்பட்டு வருகின்றது.

தம்பலகாமம் – பத்தினிபுரம் மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானம் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

திருமலை – தேவாநகர், காந்திநகர், சீனக்குடா ஒருபகுதி, கப்பல்துறை ஒரு பகுதி மக்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

புல்மோட்டை – இலந்தைக்குளம் கிராம மக்கள் இன்னும் மீள குடியமர்த்தப்படவில்லை.

திரியாய் வளத்தாமலையடி பகுதியில் காலாகாலமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவந்த 90 ஏக்கர் மக்களின் வயற்காணிகள் விகாராதிபதி ஒருவரால் அடாவடித்தனமாக ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிலாவெளி தொடக்கம் கொக்குத் தொடுவாய் வரையான கடலை அண்டிய பகுதிகளில் இல்மனைற் என்ற பெயரில் மணல் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.

வெருகல் நாதனோடை பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையிலும், அரச அதிகாரிகளின் அனுசரணையிலும் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.

மேன்காமம், கங்குவேலி, பெரியவெளி குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

திருமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.

மூதூர் – கங்குவேலியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவரும் 77 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.

மூதூர் – திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சட்டத்திற்கு முரணான வகையில் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

தொல்லியல் எனும் பெயரில் தென்னைமரவடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, நிலாவெளி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

தென்னமரவடி விவசாயிகளின் விவசாயத்திற்கான நீர் திட்டமிட்டு தடுக்கப்பட்டு கடலோடு கலக்க விடப்படுகிறது.

தென்னமரவடி மக்களின் கடல்வளம் வெளி இடத்தில் இருந்து சுரண்டப்பட்டு வருகின்றது.

திரியாய் விவசாயிகளின் 100ஆம் கண்டம் பகுதியில் விவசாயம் மேற்கொள்ள கடலுக்கு செல்லும் நீரை வழிமறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

புல்மோட்டையில் மக்களின் காணிகள் புத்த விகாரைக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன.

திரியாய் மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானம் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
மட்டு கலைஞர்களின் படைப்பான போடியார் திரைப்படம் திரைக்கு வருகின்றது!

மட்டு கலைஞர்களின் படைப்பான போடியார் திரைப்படம் திரைக்கு வருகின்றது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.