Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்தவில்லை, அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மீனவ சம்மேளனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஊடக சந்திப்பு ஒன்று நேற்று (12) நடைபெற்றது. இதன்போது பல்வேறு உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்ததுடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார கருத்துகளை முன்வைத்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விசேடமாக எங்களுக்கு தெரியும் இன்று இலங்கையிலுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பாக மீனவ சங்கங்களும், மீனவ அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

ஆகவே நாங்கள் இந்த கலந்துரையாடலை மேற்கொள்வதன் பிரதான நோக்கம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய சங்கமாக உருவாக்குவதற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் என்ற ரீதியில் எங்களது ஒத்துழைப்பினை வழங்குவோம்.

வட மாகாணத்தில் மீனவ சங்கம் ஒன்றை அமைத்துள்ளோம் அது போன்று கிழக்கு மாகாணத்திலும் ஒரு மீனவ சங்கத்தினை அமைத்து வடக்கு கிழக்கு தெற்கு என்று ஒட்டுமொத்தமாக தேசிய மீனவர் சங்கம் ஒன்றை அமைத்து இதன் ஊடாக பலம் மிக்க ஒரு சக்தியாக மாறுவதே இதன் நோக்கம்.

இதனூடாக எமது கோரிக்கைகள் பல இருக்கின்றன . அவற்றில் பிரதானமானது இலங்கையில் உள்ள மீனவர்களின் வளங்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது தொடர்பாக சர்வதேச ரீதியாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு வளங்களை பாதுகாக்க வேண்டும்.

அதுபோன்று சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் நாம் பேச வேண்டும். ஆகவே இந்த மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது அதை நடைமுறைப்படுத்தவில்லை அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் . அது போன்று தான் உங்களுக்கு தெரியும் பெண்களுடைய உரிமை சார்ந்த விடயம், மீனவர்கள் எதிர்நோக்குன்ற பிரச்சனைகள் இவை அனைத்தையும் ஒரு பலம் மிக்க சக்தியாக அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் முன்னெடுக்க முடியும்.

இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் சுற்றுலா தொடர்பான விடயங்கள் கரையோர மீனவர்களின் காணி பிரச்சினைகள் போன்ற விடயங்கள் நாட்டின் அரசாங்கத்துடன் பேச வேண்டும். இதில் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.இதன் காரணமாகவே தான் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பலமிக்க அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே நாம் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டு இருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்
செய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

May 17, 2025
தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்; ஈரானுக்கு இரு தீர்வுகளே உண்டு

May 16, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
Next Post
மட்டக்களப்பில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

மட்டக்களப்பில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.