Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

2 years ago
in செய்திகள்

அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் பேசுகின்ற போது ஒரே குரலில் பேச வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (18.06.2023) இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவான நிறைவேற்றுக் குழு கூடி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. இந்தக் கட்சிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டு இன்று இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் யாப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்த யாப்பு அடுத்து சில தினங்களில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பதவி நிலைகளுக்கும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இணைத் தலைவர்களை கொண்ட கட்சியாக இது தொடர்ந்து செயற்படும். தற்போது 5 கட்சிகள் இதில் உள்ளன. அவர்கள் 5 பேரும் இணைத் தலைவர்களாக செயற்படுவர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை வடக்கு – கிழக்கு பகுதி எங்கும் விஸ்தரிப்பது என தீர்மானித்துள்ளோம். அதனுடைய தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஜனா அவர்களை தெரிவு செய்துள்ளோம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கட்சியை பலப்படுத்த சகல நடவடிக்கைகளையும் அவர் எடுப்பார் என்பதுடன், மாவட்டங்கள், தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்து உயர்மட்ட குழுவுடன் பேசி இறுதி செய்வார் என நம்புகின்றோம்.

கட்சியின் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த துளசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து நிதிக் குழு ஒன்றையும் நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்னை மாற்றும் வரை நான் இந்தக் கட்சியின் உடைய பேச்சாளராகவும் தெரிவு செயற்படுவேன். தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டை மிக இறுக்கமாக எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு இவர்கள் இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.