மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 19 வயது இளைஞன் ஒருவர் சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர், குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று, அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு, மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று சிறுமியுடன் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியை காண சென்று, திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,குறித்த இளைஞன் 15 வயது காதலியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்று வருவது தெரியவந்துள்ளது. இதனால் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








