செய்தி:
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பத் தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் அனுப்பியுள்ள வருகைப் பதிவேடுகளில் உள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், இன்று (23) முதல் இணையவழியாக அவற்றைச் செய்ய முடியும்.
திருத்தங்களை www.doenets.lk தளத்தில் “Our Services” → “Exam Information Centre” பகுதியின் ஊடாகவோ அல்லது onlineexams.gov.lk இணையவழிப் பரீட்சை சேவை முறைமை மூலமாகவோ மேற்கொள்ளலாம்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.







