Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐம்பத்து நான்கு இரட்டை மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை!

ஐம்பத்து நான்கு இரட்டை மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை!

2 years ago
in செய்திகள்

திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட திம்புலாகல சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் ஐம்பத்து நான்கு இரட்டையர்கள் கல்வி கற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டு திம்புலாகல சிறிபுர மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 06 இரட்டையர்களால் இரட்டையர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இக்கல்லூரியில் ஒரு வருடத்திலிருந்து பதின்மூன்று வயது வரையான ஐம்பத்து நான்கு இரட்டை மாணவர்கள் கல்வி பயின்று வருவது விசேட அம்சமாகும்.

இந்த இரட்டையர்கள் கல்லூரி மைதானத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் மலர்ச்செடிகளை பல சந்தர்ப்பங்களில் நட்டுவைத்துள்ளதுடன் ஐம்பத்து நான்கு மாணவர்கள் பூச்செடிகளை பராமரித்து உரம் மற்றும் நீர் வழங்கி பாதுகாத்தமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.

சிறிபுர மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் டபிள்யூ.எம்.திலகரத்னவின் யோசனையின்படி, இந்த இரட்டை மன்றம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 16ஆம் திகதி இரட்டைக் குழந்தைகளை மதிப்பீடு செய்து கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

ஒரு நாள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இரட்டைக் குழந்தைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததாகவும், அன்றைய தினம் தனது கல்லூரியிலும் இரட்டையர் மன்றம் தொடங்க முடிவு செய்ததாகவும், அதன்படி 2018-ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது 54 இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

இந்த இரட்டையர்கள் சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த இரட்டை மன்றத்திற்கு அதிகமான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் பிரதி அதிபர் டபிள்யூ.எம். திலகரத்ன தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறிபுர மத்திய மகா வித்தியாலயத்தில் தற்போது சுமார் 1830 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் கிட்டத்தட்ட 70 ஆசிரியர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
யாழ் தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது!

யாழ் தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.