Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நடைபெறவுளள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (28) நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழக்கினை தாக்கல் செய்த நபர் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக கூறி அவருக்கு 50 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு மனுதாரர் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நியமனங்கள் வழங்கப்படாமைக்கு ஜனாதிபதியே காரணம் என்றும் எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92வது சரத்து மீறப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த ஆட்சேபனை மன்றில் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமுடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsranilwickremesinghesrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதற்கு ஆதாரம் உள்ளதா? ; அங்கஜன் எம்.பி கேள்வி!

மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதற்கு ஆதாரம் உள்ளதா? ; அங்கஜன் எம்.பி கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.