கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று (22) மதியம் பதிவாகியுள்ளது.
தகவலின்படி, நான்கு சிறுவர்கள் ஒன்றாக மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தின் போது உடன் இருந்த மற்ற மூன்று சிறுவர்களும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சிறுவனை மீட்கும் பணிகள் பிரதேச மக்கள், கம்பளை பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட மீட்புக் குழுக்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









