Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற பொதுமக்கள்; 38 முறை வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்!

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற பொதுமக்கள்; 38 முறை வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஹகுரன்கெத்த பிரதேசத்தில் சந்தேக நபர்களை கைது செய்யாததால் 200க்கும் மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு இரவு ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவொன்று பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தெரியப்படுத்தப்பட்ட போதிலும், அந்த கும்பல் கலவரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், மேலும் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலை உடைத்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் மது அருந்திக் கொண்டிருந்ததை பொலிஸார் அவதானித்ததையடுத்து, அங்கிருந்த சிலர் பொலிஸார் மீது கற்களை வீசியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் குழுவின் கலகத்தனமான நடத்தைக்கமைய, பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் கடமையில் இருந்த அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 38 முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், கலவரக்காரர்கள் பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஹகுரன்கெத்த-கண்டியூர பிரதான வீதியில் ஏறக்குறைய ஒரு மணிநேரம் தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

சம்பவத்தினால் உயிர் சேதம் அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், பொலிஸாரின் பிரதான வாயில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குழப்பத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹகுரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹகுராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக அவரை சிறையில் அடைத்தனர். குற்றத்துடன் தொடர்புடைய மேலும் 8 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு குறித்த குழுவினர் இவ்வாறு நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பதாக சீன வங்கி உறுதி ; அலி சப்ரி தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பதாக சீன வங்கி உறுதி ; அலி சப்ரி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.