Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை; நாமல் தெரிவிப்பு!

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை; நாமல் தெரிவிப்பு!

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை. குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதை எதிர்க்கொள்வோம்.

எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறுபூசலாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்கொண்ட சவால்களை இன்றும் எதிர்க் கொள்கிறோம். நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியதன் பின்னரே மக்களாணையை மீண்டும் கோருகிறோம்.

தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு உரிய வசதிகளை வழங்கினோம். இறக்குமதி உற்பத்திகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கவில்லை.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

எமது அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி கருத்திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் நிறைவு செய்தது, தற்போதைய அரசாங்கமும் நிறைவு செய்கிறது. பிரதேசங்களுக்கு பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களையே நாங்கள் முன்னெடுத்தோம்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிடைக்கும் முதலீடுகளினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன் என்னவென்பது பற்றி மாத்திரமே ஆராய்வோம். தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுவோம்.

எம்மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது . சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை திரட்டி அவற்றை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குற்றச்சாட்டுக்களை நிரூபித்து உலகில் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயார்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் ஒரு பகுதி கோப்பு அநுர குமார திஸாநாயக்கவிடம் உள்ளது, பிறிதொரு பகுதி கோப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது. ஆதாரம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இதுவரை நிரூபிக்கவில்லை. ஆகவே எம்மீதான குற்றச்சாட்டுக்கள் வெறும் அரசியல் சேறு பூசலாகவே காணப்படுகிறது என்றார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

May 21, 2025
மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு
செய்திகள்

மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு

May 21, 2025
அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!
செய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!

May 21, 2025
ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்
செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்

May 21, 2025
இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை

May 21, 2025
Next Post
வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கு வெளியான தகவல்!

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கு வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.