Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

8 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (25) கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற போது கட்சியின் பொதுசெயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாகவும், கிழக்கு மாகாணத்தை நேசக்கின்ற அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை வழங்கி தற்போதைய ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

தமிழ் அரசு கட்சியில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கில் ஒருமித்து பயணிக்க முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மைக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விருப்பமுடைய எவரும் எம்முடன் இணைய முடியும்.

மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். மக்கள் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை மீண்டும் விடாது இம்முறை எமது கட்சி மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டி போடவுள்ளது, அனைவரும் ஒருமித்து எம்முடன் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்.

எமது கட்சியின் ஊடாக 3 பிரதிநிதித்துவத்தை பெற முடியும் அதனூடாக கிழக்கு மக்களின் நலனுக்காக ஒரே கூரையின் கீழ் நாம் பயணிப்போம். அதனடிப்படையில் பொதுவான சிந்தனையில் அனைவரும் ஒன்று சேர முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைப்பதாக தெரிவித்தார்.

மக்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சி சுக்குநூறாக உடைந்து 4 பக்கமாக நிற்கின்றது, அது மட்டுமல்லாது தற்போது பொது கட்டமைப்பு எனும் பேரில் இனி மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இதை மக்களும் நன்கு அறிவார்கள் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
பிரச்சார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவிப்பு!

பிரச்சார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.