Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அமரர் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தியாக அமரர் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஊரெழுவில் பிறந்தவர்.தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய அவர் ஐந்து அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி அகிம்சை ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ – பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு – நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

May 31, 2025
வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

May 31, 2025
ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு
செய்திகள்

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு

May 31, 2025
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

May 31, 2025
123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!
செய்திகள்

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
Next Post
அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.