Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம்; மேயரின் வீட்டுக்கு தீ!

பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம்; மேயரின் வீட்டுக்கு தீ!

3 years ago
in உலக செய்திகள்

பிரான்ஸில் போராட்டம் வன்முறைாக மாறிய நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆபிரிக்க சிறுவன், கடந்த 5 நாட்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நிற்காமல் விதிமீறி சென்று விட்டான் எனக் கூறி காவல்துறையிர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டான். இதுபற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், அரசுக்கு எதிராக பாரிஸ் உட்பட எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன.

பாரிசில் வன்முறை பரவியதில், 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 170 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வின்சென்ட் ஜீன்பிரன் தனது வீட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“எனது வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாகச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

என்னுடைய வீடு மீது அந்தக் கும்பல் கார் ஒன்றை மோத வைத்துள்ளது. ஆத்திரம் தீராமல், வீட்டில் எனது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், எனது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒன்று காயமடைந்து உள்ளனர்.

இது பேசி விவரிக்க முடியாத ஒரு கோழைத்தன கொலை முயற்சி” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

June 16, 2026
ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!
உலக செய்திகள்

ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!

June 16, 2026
நடுவானில் அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

நடுவானில் அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

June 16, 2026
Next Post
மட்டக்களப்பில் பாடசாலைக்கு சொந்தமான காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

மட்டக்களப்பில் பாடசாலைக்கு சொந்தமான காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.