ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
நீரிணையில் அனைத்து கப்பல் நகர்வுகளையும் IRGC கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், அமெரிக்க கடற்படை கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது.
இதற்கிடையில், நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவை விட கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முக்கிய எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.








