Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம யாத்திரிகர்களுக்கு நாவலடியில் வழங்கும் அன்னதானம் தொடர்பில் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் குற்றச்சாட்டு; முன்னாள் முதல்வர் விளக்கம்!(காணொளி)

கதிர்காம யாத்திரிகர்களுக்கு நாவலடியில் வழங்கும் அன்னதானம் தொடர்பில் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் குற்றச்சாட்டு; முன்னாள் முதல்வர் விளக்கம்!(காணொளி)

3 years ago
in மட்டு செய்திகள்

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்தாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 07 மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையெனவும் அவர் தன்னைப்போல பிறரையும் நினைக்கின்றார்.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்கு கூட்டத்தில் மாவட்ட இணைத்தலைவர் மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்பட்ட அன்னதான செயற்பாடுகள் தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கதிர்காம பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கான தீர்மானமானது 2022ஆம் ஆண்டு சபை மூலமாக எடுக்கப்பட்டது.அந்த தீர்மானத்தின் மூலம் நிதி வழங்குனர்களின் நீதிமூலமாகவும் மாநகரசபையின் வளங்களையும் பயன்படுத்தி அந்த அன்னதானத்தை செய்வது என தீர்மானித்து.

அதன் அடிப்படையில் கதிர்காம பாதயாத்திரை செல்லும் நாவலடியென்னும் இடத்தில் 2022 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்குவதற்கு தீர்மானித்து அன்னதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த அன்னதான செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்ற நோக்குடன் நிதிகொடையாளர்கள் அனைவரையும் உள்வாங்கிய வகையிலான ஒரு அன்னதான சபை உருவாக்கப்பட்டது.

நிதி வழங்குனர்கள் ஒரு பங்குதாரர்களாகவும், வள பங்குதாரர்களாகவும் மாநகரசபையில் உள்வாங்கப்பட்டு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சபை மூலமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.சுமார் 21கொடையாளர்கள் நிதி வழங்கியிருந்தனர்.

மாநகரசபையானது அன்னதானசபை கோரும் பட்சத்தில் மாநகரசபையின் வளங்களான ஆளணி,வாகன வசதிகளை வழங்க வேண்டும் என்று யாப்பு எழுதப்பட்டுள்ளது.அன்னதான நிதிவழங்குனர்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகளை வழங்கவேண்டும் என்பதும் அந்த யாப்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.