Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்மன்பில வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

கம்மன்பில வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

8 months ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

அல்விஸ் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ சிஜடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போதே அந்த அறிக்கை எனக்கு கிடைத்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்தும் விருப்பம் இல்லாததால் நான் அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை.

ஏ.எம்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவில் தனிப்பட்ட வகையில் எனக்கு பழக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த குழு நியமனத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

நாட்டில் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு தகவல் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விசாரணை செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது.

மேலும் அந்த தகவல் தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணை செய்வதும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த இன்னுமொரு கடமையாகும்.

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்?

அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கையில் மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும். என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை
செய்திகள்

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

June 9, 2025
அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது
செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

June 9, 2025
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

June 9, 2025
Next Post
குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்தின் அழைப்புக்காக காத்திருக்கும் காஞ்சன விஜேசேகர

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்புக்காக காத்திருக்கும் காஞ்சன விஜேசேகர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.