Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்; ஜனாதிபதி அநுர

முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்; ஜனாதிபதி அநுர

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (08) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பின் அத்தகைய தரப்பினருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு சில கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். ஜனவரி மாதம் புதிய பாடசாலை தவணை நடைமுறைக்கு வருகிறது.

“டிசம்பரில் பாடசாலை தவணை முடிவடைந்தாலும், அடுத்த புதிய பாடசாலை தவணை ஜனவரி இறுதியில் தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த ஆண்டு ஜனவரியில் பழைய தவணை முடிவடைகிறது. புதிய தவணை ஜனவரி இறுதியில் தொடங்குகிறது.

அந்த புதிய பாடசாலை தவணையில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது, ​​புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சரியாக வாங்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

அடுத்தப்படியாக அஸ்வெசும, அதில் உள்ள பெயர்களை மாற்ற மாட்டோம். அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும்.

ஏற்கனவே இது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வையுங்கள்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி

June 13, 2025
பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்
செய்திகள்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

June 13, 2025
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்
செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

June 13, 2025
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை
செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

June 13, 2025
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு
அரசியல்

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு

June 13, 2025
Next Post
தேர்தல் சட்டத்தை மீறிய 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டத்தை மீறிய 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.