Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்; சுமந்திரன்

தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்; சுமந்திரன்

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் .

தேர்தல் கால ஊடகச் செவ்வியில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த்துள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம்.

ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.

நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் , நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் , எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம் என்றார். இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அந்தவகையில் இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்தகாலங்களில் இன்னொருவரின் வாக்குசீட்டுக்களை மோசடி செய்தே சுமந்திரன் நாடாளுமன்றம் சென்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
செய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

June 16, 2025
புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்
செய்திகள்

புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்

June 16, 2025
ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 16, 2025
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
Next Post
பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.