Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டினை மேற்கொள்வதால் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம பொது மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன், அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் “துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே”, “மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே” போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபனிடம் மகஜரினை கையளித்ததனைத் தொடர்ந்தும், பிரதே செயலாளரின் வாக்குறியினை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!
செய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

May 28, 2025
யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

May 28, 2025
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

May 28, 2025
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி
செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

May 28, 2025
சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி
செய்திகள்

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

May 28, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

May 28, 2025
Next Post
அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.