Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சரத் வீரசேகரவுக்கு மனநோய்; எச்சரித்த செல்வம் அடைக்கலநாதன்!

சரத் வீரசேகரவுக்கு மனநோய்; எச்சரித்த செல்வம் அடைக்கலநாதன்!

3 years ago
in செய்திகள்

தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போன்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார். எனவே, தமிழ் மக்களை சீண்ட வேண்டாம் என அவரை எச்சரித்துக்கொள்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21.07.2023) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனநோயாளி போல் செயற்படும் சரத் வீரசேகரவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்களை அழைத்துப் பேச்சு நடத்தியபோது 13 இல் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்ற தொனியில் பேசியுள்ளார்.

சமஷ்டி முறையிலான தீர்வே எமது விருப்பமாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஒரு விடயம்.எனவே, அரசமைப்பை மீறுவதற்கு ஜனாதிபதிக்குக் கூட தகுதி இல்லை.

ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரசமைப்பை மீறும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீர்வை வழங்குவார்களா என்ற ஐயப்பாடு எம்முள் உள்ளது.

போர்க்காலத்தில் சமையல் அறையில் இருந்த சரத் வீரசேகர, தற்போது மனநோயாளி போல் செயற்பட்டு வருகின்றார்.குருந்தூர்மலை விவகாரத்திலும் மூக்கை நுழைக்கின்றார்.

சரத் வீரசேகர என்பவர் யார்? அவரை இயக்குவது யார்? அமெரிக்கத் தூதுவர், கனேடிய தூதுவர் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். இந்தியாவையும் சாடுகின்றார். அந்த மனநோயாளியைச் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.” என கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

June 20, 2026
Next Post
நீர்க்கட்டணம் செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்!

நீர்க்கட்டணம் செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.