Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு அரிசி தட்டுப்பாடு

புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு அரிசி தட்டுப்பாடு

2 years ago
in செய்திகள்

சந்தையில் நாட்டு அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பது இலங்கையர்களுக்கு கடினமாக இருக்கும் என்று மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ். ரணசிங்கவை கோடிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

தேசிய பண்டிகைகளின் போது பொதுமக்கள் தயாரிக்கும் பாரம்பரிய உணவான கிரிபத் என்ற பாற்சோறு தயாரிக்க வெள்ளை பச்சை அரிசி பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக, அரிசி பற்றாக்குறை மற்றும் முன்னணி ஆலை உரிமையாளர்கள் கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாடு அரிசியை நுகர்வோருக்கு கிலோவுக்கு 225 ரூபாய் மொத்த விலையிலும், கிலோவுக்கு 230 ரூபாய் சில்லறை விலையிலும் விற்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளது.
இதுவரை 75,000 தொன்களுக்கு மேல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் விற்க மறுப்பதால் சில வகைகளின் பற்றாக்குறை குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரிசி வர்த்தகம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்க உறுப்பினர் ரணசிங்க கூறியுள்ளார்

தற்போதைய அரசாங்கம் பற்றாக்குறைக்கு பொறுப்பல்ல என்றாலும், பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரிசி மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோருகின்றனர்,
இந்த வரி இப்போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாயாக அறிவிடப்படுகிறது இதற்கிடையில், பச்சை அரிசி மற்றும் நாட்டு அரிசிக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும், மற்ற வகைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது
செய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

July 3, 2026
ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!
உலக செய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

July 3, 2026
வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

July 3, 2026
ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

July 3, 2026
நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

July 3, 2026
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

July 3, 2026
Next Post
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.