Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

1 year ago
in செய்திகள்

பலன் தரும் மரங்ளை வேரோடு பிடுங்கி எரிந்ததால் மக்கள் விமர்சனம்

மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (02) அந்த பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தாழ்வுபாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகளில் மணல் எடுக்கப்பட்டு வீதியின் அருகில் கொட்டப்பட்டுள்ளமை தொடர்பில் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அருட்தந்தையர்களின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் மற்றும் அருட்தந்தையர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை அவதானித்ததோடு, உடனடியாக குறித்த வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, குறித்த பகுதியில் மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை மணல் திட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் அகழப்பட்டு வீதிக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவே குறித்த வீதி புனரமைக்கப்படுவது குறித்தும் மக்கள் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை(3) இடம் பெற உள்ள மன்னார் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு, குறித்த வேலைத்திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!
செய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!

June 19, 2026
அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
Next Post
மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.