Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் இருவர்மீது இலங்கை கடற்படை நேற்று முன்தினம் (27) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் காரைக்கால் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் உள்ள பதில் இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத் தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை எனவும் அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அரசின் கண்டனத்துக்கு விளக்கமளித்துள்ள இலங்கை அரசு, விபத்தாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகவும், இதில் காயமடைந்த இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரே முதலுதவி செய்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளமையும் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது
செய்திகள்

4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது

June 14, 2025
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்
செய்திகள்

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்

June 14, 2025
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு
செய்திகள்

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

June 14, 2025
வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை
செய்திகள்

வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

June 14, 2025
இன்றைய வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு

June 14, 2025
இஸ்ரேலுக்கு 100 க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பி ஈரான் தாக்குதல்!
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு 100 க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பி ஈரான் தாக்குதல்!

June 14, 2025
Next Post
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.