Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் – மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் – மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இது வரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை (01) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்துள்ளது. இவ்வாறு இடம்பெற்று வந்த இப்பேரூந்து சேவை கடந்த 7 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த போக்குரவத்தை மீண்டும் ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீறிநேசனிடம் கோரிக்கைக்கு முன்வைத்திருந்தனர்.

அதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீறிநேசன் இலங்கப் போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் மற்றும் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மண்டூர் பகுதி மக்களின் கோரிக்கையை எடுத்தியம்பியதற்கிணங்க இன்றயதினம்(01) இந்த போக்குவரத்து சேவை மீண்டும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதி மக்கள் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நடைபெற்று வரும் குருமண்வெளி – மண்டூர் படகுப் பதையில் பயணம் செய்து களுவாஞ்சிக்குடி சென்று பின்னர் அங்கிருந்தே மட்டக்களப்பு நகர்ப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தடைப்பட்டிருந்த இந்த போக்குவரத்துசேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீறிநேசன், இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் பூ.கோகுலவேந்தன், மற்றும் அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்
செய்திகள்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

July 2, 2026
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
Next Post
புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.