Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம்; விவசாயிகள் கவலை

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம்; விவசாயிகள் கவலை

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோாடு, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நட்ட ஈடுகளை தந்து உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு – படுவான்கரைப் பெருநிலப்பகுதியின் பெரும்போக வேளாண்மை செய்கையே இவ்வாறு பாதிப்படைந்துள்ளது.

கடந்த வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பதிலும் ஏற்பட்ட அடை மழை, மற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாகவும், வேளாண்மைச் செய்கை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் அதிலிருந்து எதிர்பார்த்த அறுவடை கிடைக்காமல் போயுள்ளது.

இந்தநிலையில், அறுவடை செய்யப்பட்ட மீதமான நெல்மணிகளில் கறுத்த புள்ளிகள் மற்றும் நிறை குறைவாகவும் அதிகம் பதராகவும் காணப்படுவதனால் இந்த முறை எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளான தமக்கு, உரிய நட்ட ஈட்டை தந்து உதவுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த வருடம் ஏக்கருக்கு 30 மூடைகள் கிடைத்த போதும் தற்போது 15 மூடைகள் அளவில் கிடைப்பதாகவும், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடைகளில் எண்ணை, பசளைகளை, கடனுக்குப் பெற்றுள்ள போதும் தற்போது அதற்குரிய அறுவடை இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் எனவே ஜனாதிபதி விவசாயிகளின் பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு தங்களுக்குரிய இழப்பீடுகளை தந்து உதவுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.

வயல்கள் ஈரமாக காணப்படுவதனால் அறுவடை செய்வதில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வியாபாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்களுக்கு வேண்டிய அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

May 30, 2025
ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை
செய்திகள்

ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை

May 30, 2025
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

May 30, 2025
பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு
செய்திகள்

பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு

May 30, 2025
அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்
செய்திகள்

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

May 30, 2025
வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்
உலக செய்திகள்

வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்

May 30, 2025
Next Post
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.