நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அதிகரித்து வரும் வன்முறைகள், அமைதியின்மை மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
அடிப்படை நிறுவனங்களில் ஒன்றான சிறைச்சாலைகளையே ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்க இயலாத இந்த அரசாங்கத்தால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு திறம்பட வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், ஆட்சி செய்யத் திறமையில்லை என்றால் அரசாங்கம் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் தெளிவான திட்டமிடலுடன் ஆட்சியை ஏற்று நிர்வகிக்கத் தங்கள் கூட்டணி தயாராக உள்ளதாகவும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.







