மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் நேற்று (01) அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.








