அரசாங்கம் 675 கிலோ கிராம் எடையுடைய நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது.
உத்தரவாத விலையின் அடிப்படையில் இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் விற்பனை சபையின் தலைவர் மஞ்சுள பின்கந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-582.png)
இன்னமும் நெல் விளைச்சல் அதிகளவில் சந்தைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் விவசாயிகள் அரசாங்கத்திடம் நெல்லை விற்பனை செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நெல்லை விற்பனை செய்யாது தனியாருக்கு விற்பனை செய்வதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.