Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

4 months ago
in செய்திகள்

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என பனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன.

பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள் அமெரிக்கா நாடு கடத்தும் ஏனைய நாட்டவர்களை ஏற்பதற்கும் அவர்கள் நாடு கடத்தப்படும் வரை தங்கள் நாட்டில் வைத்திருப்பதற்கும் இணங்கியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பனாமா கால்வாயை கைப்பற்றப்போவதாக எச்சரித்த சூழ்நிலையில் சமீபத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்த நாடுகளிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அமெரிக்க நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன.

கடந்த பல நாட்களாக 300 குடியேற்றவாசிகள் அனேகமாக ஆசியாவை சேர்ந்தவர்கள் பனாமாவின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதுவரை 97 பேரை டாரியன் மாகாணத்தில் உள்ள சான் வின்சென்டே நிலையத்திற்கு மாற்றியுள்ளோம் பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பகுதி கொலம்பிய எல்லையில் உள்ளது.

தலைநகரிலிருந்து கிழக்காக உள்ள மெட்டேய் பகுதியில் உள்ள இந்த நிலையத்தை அமெரிக்க எல்லைக்கு செல்வதற்காக ஆபத்தான காட்டுப்பாதையை கடந்து கொலம்பியா ஊடாக மெக்சிக்கோவிற்குள் நுழைபவர்கள் இதுவரை பயன்படு;த்தி வந்தனர்.

அமெரிக்கா இதுவரை நாடுகடத்தியுள்ள 199 குடியேற்றவாசிகளில் 175 பேர் சுயவிருப்புடன் தங்கள் நாடுகளிற்கு திரும்புவதற்கு இணங்கியுள்ளனர்.இவர்கள் இன்னமும் பனாமாவின் தலைநகரில் உள்ள ஹோட்டலில் உள்ளனர்.

இதுவரை 41 பேர் விமானபயணச்சீட்டுகளை வாங்கியுள்ளனர் இவர்களில் 17 பேர் இந்தியர்கள் என பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குடியேற்றவாசிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைத்திருக்கவில்லை என பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை என கையால் எழுதப்பட்ட அட்டையை தாங்கியவாறு சிலர் ஜன்னல்களில் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
Next Post
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.