கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன் போது சீமெந்துக் கற்கள் ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று, வௌ்ளவத்தையில், காலி வீதி திடீரெனத் தாழிறங்கியதில் புதைந்து கொண்டுள்ளது.
கொழும்பில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.