Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

1 year ago
in செய்திகள்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

மார்ச் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் தினத்தையொட்டி அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவினால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்தில் பதில் வழங்கி உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த,

வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதியுடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடல்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், அதற்கமைய தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

08ஆம் திகதி பி.ப. 6.00 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ILO உடன்படிக்கை 190 இன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அனைவருக்கும் காணப்படும் உரிமையை கண்டறிந்து 2019 ஜூன் 21 ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 108 ஆவது அமர்வில் தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரும், வன்முறை மற்றும் துன்புறுத்தல் இன்றி சகலரும் செயற்படக்கூடிய உரிமையை பாதுகாக்கும் சூழலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து செயற்படுவதை உறுதிப்படுத்துகின்றது.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்கான அரசங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதுடன், அதுமட்டுமல்லாமல், அது சம்பந்தப்பட்ட சட்டரீதியான அமுல்படுத்தல்களுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த உடன்படிக்கையை இலங்கையில் அங்கீகரிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக இலங்கையின் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அந்த சந்தர்ப்பம் இழந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.