கொழும்பு – குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 03 பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.