மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில், நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவரின் காணி ஒன்றினை பராமரித்துவரும் ஒருவர், சம்பவதினமான நேற்று காணியை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் கண்டு ஒன்றை கண்டு, பொலிசாருக்கு அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் குண்டைசெயலழிக்க வைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்ததுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.