மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அரச பஸ் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனார்.
காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய, பார்வையற்ற எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மட்டு நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது, காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கு பிரயாணித்த பஸ் வண்டி, கல்லடிப் பால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பிரயாணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், பஸ்வண்டி சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.