நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், செம்மணிப் படுகொலை புதைகுழிகள் போன்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காக இப்பொழுது அரசாங்கமே ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதனூடாக அதையே ஒரு பேச்சுப்பொருளாக மாற்றி, தான் எதிர்கொள்கின்ற அந்தப் பிரச்சினைகளில் இருந்தே தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றொரு கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைப் படுகொலைகளைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம் (சபாநாயகரிடம்) கையளிக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு செய்தி இருக்க, செம்மணிப் புதைகுழிகள் தொடர்பாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய கொழும்பில் இருக்கக்கூடிய தூதுவர்கள் இப்பொழுது செம்மணிக்குச் சென்று அங்கும் அந்த நிலவரங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
ஒருபுறம் நீதிமன்றத்தில் ஏற்பட்ட படுகொலைகள் என்பது, அந்தப் படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்கம் என்பது மறுபுறத்தில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் படுகொலையினுடைய புதைகுழி ஆய்வு என்பது, அதில் 450-க்கும் மேற்பட்ட உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது மாத்திரமல்லாமல் தலையற்ற உடலங்கள், தலையற்ற எலும்புக்கூடுகளும் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, ஒரு மிக மோசமான இனப்படுகொலையினுடைய சாட்சியமாக இப்பொழுது செம்மணிப் புதைகுழி விவகாரங்கள் என்பதும் ஏற்பட்டு வருகின்றது.இவை நடைபெறுகின்ற அதே சமயம், நேற்றைய தினம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றில் அங்கு ஒரு புத்தக் கோயிலைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் தெரிவித்த அவர்,








